For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி போலீசுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாட்டிலேயே முதல் முறையாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைத்துள்ளது.

சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறைக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைத்தது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை,மத்திய குற்றப் பிரிவு மற்றும் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ 9001:2000 சான்றிதழ் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயேமாவட்ட காவல் தலைமையகம் ஒன்றுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில்மொத்தம் 650 மாவட்ட காவல் தலைமையகங்களும், மாநகர காவல் தலைமையகங்களும் உள்ளன.

இந் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் தலைமயகத்திற்கு மட்டுமே முதல் முறையாக இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.புகார் கொடுப்போருக்கு ஒப்புகைச் சீட்டு கொடுப்பது, ஊழியர்களின் வருகைப் பதிவை மின்னணுமயமாக்கியது,

பொதுமக்களிடம் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்டறிந்தது, ஆலோசனைப் புத்தகத்தை சிறப்பாகபராமரித்து வந்தது, புகார்கள் மீது தரமான நடவடிக்கை என பல்வேறு சிறப்பம்சங்கள், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைக்க ஏதுவாகஅமைந்தது என்று கூறினார் ரத்தோர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X