மீண்டும் சிறையில் ஐடியல் சுப்பிரமணி
சென்னை:
7 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின்னர் ஐடியல் சுப்ரமணியம் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரும் சிறையில்அடைக்கப்பட்டனர்.
வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பலபேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஐடியல் சுப்பிரமணியத்தை 7 நாள் போலீஸ்காவலில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் எடுத்திருந்தனர். அவரை வத்தலகுண்டு, விராலிப்பட்டி, கொடைக்கானல்ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின்போது ஏராளமான ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றினர். 20க்கும் மேற்பட்ட ஐடியலின் வங்கிக்கணக்குகளை முடக்கினர். சொத்துக்கள் குறித்த பத்திரங்களையும் கைப்பற்றினர்.
போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் இன்று காலை எழும்பூர் கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் ஐடியல் சுப்பிரமணியத்தைபோலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி அருள்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஐடியல்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல கைது செய்யப்பட்ட ஐடியல் சுப்பிரமணியத்தின் 2 கூட்டாளிகளில் ஒருவரான செளந்தர் என்ற செளந்தரராஜனும்எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்ததரவிட்டார்.
இன்னொரு கூட்டாளியான மணி என்ற மணிகண்டன் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications