தளவாயின் பாலியல் முறைகேடு: விசாரணைக் குழுவின் ஆயுட்காலம் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு பெண் டாக்டர் கோமதியிடம், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதுதொடர்பான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவின் ஆயுள் காலம் மேலும் 2மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. தன்னிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம்பாலியல் முறைகேட்டில் ஈடுபச முயன்றதாக கோமதி குற்றம் சாட்டினார்.

அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை நியமித்தது. இந்தக் குழு வரும் செப்டம்பர் 1ம் தேதி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிடப்பட்டிருந்தது.

இந் நிலையில், நீதிபதி மருதமுத்து, உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், விசாரணைக் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையைப்பரிசீலித்த நீதிபதி சிவசுப்பிரமணியம், விசாரணைக் காலத்தை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+