குஜராத்தில் கொத்தடிமை வேலை: சென்னை ரயில் நிலையத்தில் 18 சிறுவர், சிறுமியர் மீட்பு
சென்னை:
கொத்தடிமைகளாக வேலை பார்க்க குஜராத் கொண்டு செல்லப்படவிருந்த 16 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்களை சென்னைசென்டிரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகமதாபாத் செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற இவர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்ததால் ரயில்சென்று விட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ரயில் நிலையத்திலேயே குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர்.இவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த ரயில்வே போலீஸார், அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுசிறுவர், சிறுமியருடன் வந்திருந்த 3 பேர், அனைவருக்கும் 18 வயதுக்கு மேலாவதாகவும், குஜராத்தில் வேலையில்சேர்ப்பதற்காக கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் சந்தேகம் நீங்காத போலீஸார் 19 பேரையும் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பினர். சோதனையில்ஒரே ஒரு இளைஞருக்கு மட்டும் 19 வயது என்றும் மற்ற அனைவருமே 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுவர்களுடன் வந்திருந்த கேரளாவைச் சேர்ந்த ரமேஷ், காரைக்காலைச் சேர்ந்த செல்வம், நன்னிலத்தைச் சேர்ந்தசுரேஷ் ஆகிய மூன்று ஏஜென்டுகளையும் போலீஸார் கைது செய்தனர்.
19 வயது இளைஞர் அவரது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார். மற்ற 18 பேரில், 16 சிறுமிகளை புரசைவாக்கம் அரசினர்காப்பகத்திலும், 2 சிறுவர்களை ராயபுரம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் போலீசார் தங்க வைத்துள்ளனர்.
இந்த 19 பேரும் திருவாரூர், மயிலாடுதுறை, நன்னிலம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களில் சிலர் ஏற்கனவே குஜராத் சென்று வேலை பார்த்துள்ளனர்.
இவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.