இஸ்லாமிய தீவிரவாதம்: புஷ் தான் காரணம்-ருஸ்டி
லண்டன்:
உலகளவில் இஸ்லாமிய ஜிகாத் போராட்டத்தைத் தூண்டிவிட ஒசாமா பின் லேடன் முயன்று தோற்றுப் போனார். ஆனால், அந்தவேலையை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் செய்து முடித்துள்ளார் என சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்டி கூறியுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து தவறாக எழுதி தீவிரவாதிகள் மிரட்டலுக்கு உள்ளான ருஸ்டி இங்கிலாந்தில் அரசுப் பாதுகாப்புடன்வசித்து வருகிறார். இப்போது ஷாலிமார், த குளோன் என்ற புதிய நாவலை எழுதியுள்ள ருஸ்டி அது குறித்து எடின்பர்க்கில்நடந்த புத்தக விழாவில் பேசினார்.அவர் கூறுகையில்,
என் இளைய வயதில் இஸ்லாம் மிக அமைதியான மதமாக இருந்தது. இப்போது மதப் போராளிகள் என்ற ஜிகாதிகளால்இஸ்லாமின் முகம் மாறிவிட்டது.
1950, 60களில் காஷ்மீரில் தீவிர இஸ்லாம் இல்லை. சகிப்புத்தன்மை நிறைந்த மதமாக அது இருந்தது.
ஜிகாதிகளை உருவாக்குவதில் பின் லேடனுக்கு கிடைக்காத வெற்றி, ஜார்ஜ் புஷ்சுக்குக் கிடைத்துள்ளது. இன்றையதீவிரவாதத்துக்கு புஷ் தான் முக்கியக் காரணம். இஸ்லாமிய உலகில் மதத் தீவிரவாதம் கொழுந்து விட்டு எரிவதற்குக் காரணம்ஜார்ஜ் புஷ் தான்.
இராக்கிலும் காஷ்மீரிலும் நிலவி வரும் தீவிரவாதத்தை இரண்டாம் உலகப் போரின்போது பிரஞ்சு போராளிகள் நடத்தியஆதிக்க எதிர்ப்பு போராட்டத்துடன் ஒப்பிடலாம் என்றார் ருஸ்டி.












Click it and Unblock the Notifications