For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் சிலை ஊர்வலம்: அமைதியாக நடத்த போலீஸ் தீவிர ஏற்பாடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் வரும் 11ம் தேதி அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்தி முடிப்பதற்காக, விழாஅமைப்பாளர்களுடன் இன்று காவல்துறை ஆணையர் நட்ராஜ் பேச்சு நடத்தவுள்ளார்.

செய்தியாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா மீது தணிக்கைச் சான்றிதழைத் திருப்பித் தராதது உள்பட 3வழக்குகள் உள்ளன. தற்போது சூர்யா தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததும், சட்ட நிபுணர்களின் கருத்தை அறிந்த பின்னர் புதிய வழக்கு உள்பட நிலுவையில் உள்ளவழக்குகளில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை நகருக்கு தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளால் ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக இதுவரை எங்களுக்குத்தகவல் வரவில்லை. இருப்பினும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை நநிகரை வைத்துள்ளோம்.

நகர், புறநகர் பகுதிகளில் முக்கிய சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸார்24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

மக்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலமாகவே உள்ளன.

சென்னையில் வரும் 11ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க6 இடங்களை காவல்துறை அனுமதித்துள்ளது.

ஊர்வலம் நடத்துவது தொடர்பாக விழா அமைப்பாளர்களுடன் சனிக்கிழமையன்று பேச்சு நடத்தவுள்ளேன். அமைதியானமுறையில் விநிாயகர் சிலை ஊர்வலம் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது என்றார் நடராஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X