ஐடியலின் கூட்டாளியிடம் பெரியகுளத்தில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
ஐடியல் சுப்பிரமணியத்தின் கூட்டாளியான முகி எனப்படும் முத்துக்கிருஷ்ணனை பெரியகுளத்தில் வைத்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் மிக நெருங்கிய கூட்டாளியாக விளங்கியவர் முகி. கிட்டத்தட்டஐடியலின் தத்துப் பிள்ளையாகவே கருதப்பட்டார்.அந்த அளவுக்கு நெருங்கியவராக இருந்த முகி, சமீபத்தில் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை சென்னை போலீஸார் தற்போது 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
அவரை பெரியகுளம் கொண்டு சென்றுள்ள போலீஸார் அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐடியலின் நகைக் குவியல், பணம் குறித்து பல்வேறு தகவல்களை முகியிடமிருந்து போலீஸார் திரட்டி வருகின்றனர்.
நாளை தேனிக்கும், பின்னர் கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்றுஅங்கெல்லாம் ஐடியல் செய்த திருட்டுத்
தனங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications