ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் சாவு
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏரியில் குளித்த 4 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி அன்புக்கரசி. இவர்களுக்கு ஜெகன்,மணிமாறன் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் 7வது வகுப்பு படித்து வந்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு இரு சிறுவர்களும் தங்களது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கச் சென்றனர். அப்போதுஅங்கே மழை நீர் அதிக அளவில் தேங்கியிருந்ததால் குளம் ஆழமாக இருந்தது.
சிறுவர்கள் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென ஜெயசீலன் என்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்த மற்றசிறுவர்கள் அவனைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் வரதராஜன் என்ற சிறுவனும் நீரில் மூழ்கினான். இருவரும் மூழ்குவதைப் பார்த்தஜெகனும், மணிமாறனும் வேகமாக நீந்தி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக அவர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
நீரில் மூழ்கிய நான்கு சிறுவர்களையும் மீட்க பலரும் முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது, உயிரிழந்தசடலங்களையே அவர்களால் வெளியில் கொண்டு வர முடிந்தது. தண்ணீரில் குதித்து, ஏரி சேறில் சிக்கித் தத்தளித்த மற்ற 4 சிறுவர்களும்பத்திரமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications