For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளித்தலை ஆசிரியை கொலை; பெங்களூரில் பிணம் கண்டுபிடிப்பு?

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை செய்யப்பட்டு பெங்களூரில் அவரது உடல் வீசப்பட்டிருக்கலாம் என போலீஸார்தெரிவித்துள்ளனர்.

குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி காணாமல் போனார். இதுதொடர்பாக அவரதுகணவர் ஜோதி ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மதுரை உயர்நீதிமன்றம் மாற்றியது. இவ்வழக்க தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன்,உறவினர் ரங்கநாதன் உள்ளிட்ட பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் துப்பு கிடைக்காமல் பெரும் இழுபறி ஏற்பட்டதால் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை எஸ்.பி. பிரேம்குமாரிடம்தமிழக அரசு ஒப்படைத்தது. பிரேம்குமார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்த பின்னர் வழக்க சூடு பிடித்தது.

கிட்டத்தட்ட 900 பேரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில் பெரும் திருப்பமாக மீனாட்சி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அவரது உடல் பெங்களூரில் சாக்கடை ஒன்றில்வீசப்பட்டதாகவும் கூறப்படுகிற;.

இதையடுத்து மீனாட்சி வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நிலவும் இழுபறிக்குமுற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X