செப். 10, 11ல் விநாயகர் சிலை ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கவிருப்பதையொட்டி நகர் முழுவதும் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த சிலைகளை வைத்துள்ளன. மொத்தம் 570 இடங்களில்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கடலில் விநாயகர்சிலைகளைக் கரைப்பதற்காக 6 இடங்களை காவல்துறை ஒதுக்கியுள்ளது.

சிலை கரைப்பு மற்றும் ஊர்வலம் ஆகியவற்றையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைஊர்வலத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், காவல்துறை குறிப்பிட்ட வழியில்தான்ஊர்வலத்தை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு போலீஸார் இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+