கோவை நபர் சித்திரவதை: 15 கேரள போலீஸார் மீது வழக்கு
கோயம்பத்தூர்:
கோவையைச் சேர்ந்தவரை கேரளாவுக்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்ததாக கேரள காவல்துறையைச் சேர்ந்த 15போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டீபன். இவரது வீட்டுக்கு கேரள மாநிலம் பாலக்காடு போலீஸார் கடந்த 4ம் தேதிவந்தனர். கடத்தல் வழக்கு ஒன்றில் விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக தங்களது வாகனத்தில் ஏற்றிபாலக்காட்டுக்குக் கொண்டு சென்றனர்.அங்கு வைத்து ஜார்ஜ் ஸ்டீபனை கேரள போலீஸார் சித்திரவதை செய்து, அடித்து உதைத்துள்ளனர். போலீஸாரின் சித்திரவதைக்குஆளான ஸ்டீபன் காயமடைந்தார். அதன் பின்னர் அவரை கேரள போலீஸார் விடுவித்துள்ளனர்.
கோவை திரும்பிய ஸ்டீபன் போதனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரைக் கேட்டறிந்த கோவை போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் கேரளாவுக்கு ஸ்டீபனைக் கூட்டிச் சென்று சித்திரவதை செய்த கேரளபோலீஸாரின் செயல் முற்றிலும் சட்டவிரோதமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீபனைக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்ததாக பாலக்காட்டைச் சேர்ந்த 15 போலீஸார் மீது கொலை முயற்சி, கடத்தல்உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போதனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள போலீஸாரின் செயல் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications