For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரையும் பகைக்க விரும்பவில்லை: விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் நடத்த நான் விரும்பவில்லை. அனைவருமே எனது நண்பர்கள்தான் என்று நடிகர்விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் வருகிற புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரசியல் மாநாடு தொடர்பான பணிகளை விஜயகாந்த் நேரில்சென்று பார்வையிட்டார். சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் கட்சி தொடங்குவது கண்டு பலருக்குப் பயம். எனது வளர்ச்சியைப்பார்த்து அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது.

எனது கட்சி மாநாட்டுக்கு பஸ்கள், வேன்களைக் கொடுக்கக் கூடாது என்று மிரட்டல் வருவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.இதற்காக நான் சோர்ந்து போய் விட மாட்டேன். எனது மாநாட்டுக்கு எப்படி வர முடியுமோ, அப்படி ரசிகர்கள் வந்துசேருவார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் எனது கட்சியின் தொடக்க விழா அழைப்பிதழை கொடுத்துள்ளேன். முதல்வர்ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு எனது மைத்துனரே நேரில் சென்று அழைப்பு கொடுத்துள்ளார். முதல்வர்வெளியூரில் இருந்ததால், அவரது செயலாளரிடம் கொடுக்கப்பட்டது.

எனக்கு நேரில் போய் கொடுக்க முடியாத அளவுக்கு படப்பிடிப்புகளும், மாாநட்டுப் பணிகளும் இருந்ததால் நான்போகவில்லை. உள்ளூர் தலைவர்கள் தவிர லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்களுக்கும் அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது.

வைகோ, ஜி.கே.வாசன், திருமாவளவன் ஆகியோருக்கும் அழைப்ப அனுப்பியுள்ளோம். யாரையும் நான் பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை. அதற்காகவே அனைவருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X