24 இந்திய மீனவர்களை சிறை பிடித்தது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
24 இந்திய மீனவர்களையும், அவர்களது நான்கு படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் சிறை பிடித்துள்ளனர்.பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி இவர்களை அந்நாட்டு கடற்படை பாதுகாப்பு படை பிடித்துள்ளது. வழக்கமாகஇவ்வாறு பிடிபடும் இந்திய மீனவர்களை சில காலம் கழித்து பாகிஸ்தான் அரசு விடுதலை செய்து விடும். ஆனால் அவர்களதுபடகுகளை அது திருப்பித் தருவதில்லை. மீண்டும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் வருவதைத்தடுப்பதற்காகவே படகுகளை திருப்பித் தருவதில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
பாகிஸ்தான் சிறையில் நீண்ட காலமாக வாடி வரும் 435 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுவிக்க உறுதி கூறியுள்ளநிலையில் 24 மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications