For Daily Alerts
Just In
சங்கரராமன் வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 5ம் தேதிசெங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதாக இருந்தது. இதற்காககுற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் ஆஜராகியிருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இருப்பினும் ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அக்டோபர் 4ம் தேதி வரை குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்படுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் நேரில்ஆஜராகத் தேவையில்லை என்றும் அது அறிவித்தது. இருப்பினும் விசாரணையைத் தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் அனுமதிஅளித்தது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தவிர மற்ற 22பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Story first published: Monday, September 12, 2005, 5:30 [IST]