For Daily Alerts
Just In
சங்கரராமன் வழக்கு: அக். 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.சங்கரராமன் கொலை வழக்கு தற்போது செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாம் தேதிஇந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது. மேலும், இரு சங்கராச்சாரியார்களும் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருசங்கராச்சாரியார்களும் தவிர மற்ற 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அக்பர் அலி அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments
Story first published: Monday, September 12, 2005, 5:30 [IST]