சிவகாசி: பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டி என்ற இடத்தில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியையொட்டிபட்டாசுத் தயாரிப்பு நடந்து வருகிறது. இன்று மாலை பட்டாசுகளை காய வைப்பதற்காக ஒரு அறையில் போட்டுவைத்திருந்தனர்.
இதில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications