தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கம்யூ. தொண்டர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்பு, நிலம், உணவு வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மத்திய கூட்டணி அரசின் பொது செயல் திட்டத்தை முறையாக கடைப்பிடிக்கக் கோரியும், பொருளாதாரக் கொள்கைகளைக்கண்டித்தும், ஏழை எளியோருக்கு வேலை, உணவு, நிலம் வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம்முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் மாநிலச் செயலாளர் வரதராஜன் தலைமையில், நடந்த போராட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சென்னையில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 2000க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீஸார்கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கோவையில் 5000 பேரும், மதுரையில் 4500 பேரும் போராட்டத்தில் ஈடுபடுட்டு கைதாகினர். மற்ற பகுதிகளிலும் இதுபோலஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+