சிங்கப்பூர் அதிபருக்கு டாக்டர் பட்டம் வழங்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திராவிட பேரவை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் இதுகுறித்து மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிங்கப்பூர்அதிபராக 2வது முறையாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்லப்பன் ராமநாதன் (எஸ்.ஆர்.நாதன்) பிறப்பால்தமிழர். இது தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் பெருமையான விஷயமாகும்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக கெளரவம் பெற்றுள்ளது. மத்திய அரசும் தமிழை செம்மொழியாகஅங்கீகரித்துள்ளது. எனவே சிங்கப்பூர் அதிபர் நாதனுக்கு, புதுவை மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்துகெளரவிப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஏற்கனவே மாலத்தீவு அதிபருக்கு புதுவை மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதுபோலநாதனுக்கும் டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

புதுவை மத்திய பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+