தமிழை அழிக்கும் ஆங்கிலம்! ராமதாஸ் ஆதங்கம்
சென்னை:
இந்தியை முதலில் எதிர்த்து வந்தோம். ஆனால் இப்போது ஆங்கிலம், தமிழ் மொழியை அழித்துக் கொண்டுள்ளது என்று பாமகநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் பாமக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,பெரியார் இந்தி மொழியை எதிர்த்தார். அந்நிய மொழி வந்தால் தமிழ் பாதிக்கப்படும் என்றார். ஆனால் இதை அந்நியமொழியான ஆங்கிலத்தால் தமிழ் அழிந்து வருகிறது.தமிழ் அழிவதை நாம் உணரவில்லை. ஆங்கிலத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு மொழிப் பாடமாகவைக்க வேண்டும். அதையே பிரதானமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.
ரசிகர் மன்றங்கள் இப்போது அரசியல் கட்சியாக மாறி வருகின்றன. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உத்தரப்பிரதேசஆளுநர் ராஜேஷ்வர் சொன்ன கருத்துதான் எனது கருத்தும். அவர் சொன்னார்: தமிழகத்தைப் போல நடிகர்களுக்கான ரசிகர்மன்றங்கள் வேறு எங்குமே இல்லை. இந்த மன்றங்கள் அரசியல் கட்சிகளாக உருவெடுப்பது பெரும் ஆபத்தாக முடியும்.இளைஞர்கள் பகுத்தறிவு குறித்து சிந்திக்க வேண்டும். மூட நம்பிக்கைகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று ராஜேஷ்வர்சொன்னார்.
பெரியாரின் அறிவுப்புரட்சி இன்னும் தொடர வேண்டும். இளைஞர்கள் எந்த நிலையில் இருக்கிறர்கள், எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பிற மொழிக் கலப்பின்றி தமிழில் பேசுவது எப்படி என்ற தலைப்பில் ராமதாஸ் எழுதிய நூலை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.