சங்கரராமன்: விடுவிக்கக் கோரிய 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, அதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் தாக்கல் செய்த மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 23 பேரில் அப்பு உள்ளிட்ட 11 பேர் தங்களை இந்தவழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த மனு மீது ஏற்கனவே விசாரணை முடிவடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து இந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.11 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்க இயலாது என்று கூறி அவர்களது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications