கோட்டை முன் உண்ணாவிரதம்!: போலீஸ்காரர், மனைவியுடன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற போலீஸ்காரர்அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் நவநீதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் புதுக்கோட்டையில் ஆயுதப் படைப் பிரிவில் ஓட்டுநராகபணிபுரிந்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு லஞ்சம் வாங்க முயன்றதாக கூறி அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலையில் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் ஓய்வு பெறமுடியவில்லை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜகோபால். அவரை மீண்டும் பணியில் சேர்க்குமாறுஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தொடர்ந்து பணியில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வரிலிருந்து உயர்காவல் அதிகாரிகள் வரை பலருக்கும் மனு அனுப்பியும் ராஜகோபாலுக்கு விடிவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ராஜகோபால், தனது மனைவி சந்திராவுடன் சென்னை வந்தார். சட்டசபை கூடும் தினமான செவ்வாய்க்கிழமைகாலை அவர் கோட்டைக்கு வந்தார். அங்கு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்திஅவர்களைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+