திருப்பதி கோவிலுக்கு ஜெயேந்திரர் தங்க காலணி காணிக்கை!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள, 3.5 கிலோ எடையுள்ள தங்க காலணியைகாணிக்கையாக வழங்கவுள்ளார்.கடந்த 2 மாதங்களாக இரு சங்கராச்சாரியார்களும் திருப்பதியில் சதுர்மாஸ்ய விரதம் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி இருவரும்சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க காலணியை ஜெயேந்திரர் காணிக்கையாக அளிக்கவுள்ளார்.வியாழக்கிழமை மாலை அல்லது இரவில் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இணைந்து கோவிலுக்கு சென்று இந்த காணிக்கையைசெலுத்தவுள்ளநர்.
2 மாத கால சதுர்மாஸ்ய விரதம் நிறைவடைவதையொட்டி இக் காணிக்கையை சங்கராச்சாரியார்கள் வழங்குகின்றனர்.வெங்கடாசலபதிக்கு வெள்ளிக்கிழமை காலை இந்த தங்க காலணி அணிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications