நம்பர் டூ ஆகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கட்சியில் தனக்கு அடுத்தஇடத்தைக் கொடுக்க நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாக விளங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்த்தின் கட்சியில் இணைந்துள்ளார்.திரை மறைவில் விஜயகாந்த்துக்கு ஆலோசனை வழங்கி வந்த அவர் தற்போது நேரடியாக கட்சியில் இணைந்துள்ளார்.இதைத் தொடர்ந்து கட்சியில் அவருக்கு முக்கியப் பதவியைக் கொடுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. திராவிடக்கட்சிகளைப் பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆர். இருந்தபோது மூத்த தலைவர்களுக்கு அவைத் தலைவர் பதவியைக் கொடுப்பது வழக்கம்.
அதேபோல தற்போது ஜெயலலிதாவும் மூத்த தலைவர்களுக்கு அவைத் தலைவர் பதவியைக் கொடுத்து வருகிறார். நெடுஞ்செழியன்உயிருடன் இருந்தவரை அவர்தான் அதிமுகவில் நம்பர் டூ தலைவராக இருந்து வந்தார்.
ஆனால் திமுகவைப் பொருத்தவரை இந்தப் பிரச்சினைகளுக்கு இடமில்லை. காரணம் அங்கு கருணாநிதி மட்டுமே முக்கியத் தலைவராகஇருந்து வருகிறார். மற்ற அனைவருமே அங்கு இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக பாணியில் தனது கட்சியிலும் மூத்தத் தலைவர்களுக்கு முக்கிய இடம் கொடுக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது. அந்த அடிப்படையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கட்சியின் அவைத் தலைவர் பதவியை விஜயகாந்த் கொடுக்கக் கூடும் எனத்தெரிகிறது.
கட்சியின் பொதுச் செயலாளராக தற்போது மன்றத் தலைவராக இருக்கும் ராமு வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பில்அனேகமாக மாற்றம் இருக்காது. எனவே பண்ருட்டியாரை அவைத் தலைவராக அறிவித்து அவரது ஆலோசனைப்படி கட்சியின் செயல்திட்டங்கள், கொள்கைகளை விஜயகாந்த் வகுப்பார் எனத் தெரிகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் பண்ருட்டியின் ஆலோசனையைவிஜயகாந்த் கோரியுள்ளார். தறபோது நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பண்ருட்டியாரும், விஜயகாந்த்தும் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாகிகள் நியமனம் குறித்து இன்னும் சில நாட்களில் விஜயகாந்த்தே அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே,நிர்வாகிகள் பொறுப்புக்கு மன்றத்தினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே புதிதாக யாரையும் நியமிக்காமல் தற்போதைக்கு மன்றப்பொறுப்புகளில் உள்ளவர்களையே கட்சிப் பொறுப்பிலும் நியமிக்க விஜயகாந்த் முடிவு செய்யக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications