தா.கி. கொலை வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தா.கி. கொலை வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இவ்வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால்அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவதற்குத்தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் எச்.கே.சேமா, பி.என்.ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர்,
வழக்கு விசாரணைக்குத் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அழகிரிஉள்ளிட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
முன்னதாக காவல்துறை தாக்கல் செய்த மனுவில், அழகிரி மிகப் பெரும் அரசியல் தலைவரின் மகன். எனவேமதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் அவருக்கு செல்வாக்கு நிறைய உள்ளது.
ஆள் பலம், பண பலத்தைக் காட்டி அவர் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கிறார், அவர்களுக்கு மிரட்டலும்விடுக்கிறார்.
எனவே மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் சாட்சியம் சொல்ல சாட்சிகள் அஞ்சும்நிலை உள்ளது. எனவே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications