முஸ்லீம் பெண்களையும் இழிவுபடுத்துவிட்டார் குஷ்பு: தமுமுக
சென்னை - மதுரை:
நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
தமிழகப் பெண்களின் கற்பு குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கேதொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் குதித்துள்ளது. சென்னையில் இந்த அமைப்பைச் சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் நடிகர் சங்கம் உள்ள பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு குஷ்பு இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் தமிழ்ப் பெண்களை மட்டுமல்லாது,முஸ்லீம் பெண்களையும் குஷ்பு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் கூறினர்.
முன்னதாக குஷ்பு இஸ்லாமியப் பெண் என்பதால் தான் அவரை தமிழர் அமைப்புகள் எதிர்க்கின்றன என்பது போன்ற மாயையைஉருவாக்க சிலர் முயன்றனர். இதன்மூலம் இஸ்லாமிய, தமிழர் அமைப்புகளுக்கு இடையே சிண்டு முடியும் முயற்சிகள் நடந்தன.
இப்போது இஸ்லாமிய அமைப்புகளே குஷ்புவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள அந்த முயற்சிகள்தவிடுபொடியாகியுள்ளன.
அதே போல குஷ்பு விவகாரம் தொடர்பாக மதுரையில் இதுவரை பெரிய அளவில் போராட்டம் நடைபெறாமல் இருந்தது.ஆனால் நேற்று முழுவதும் குஷ்புவைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தின.
பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத், விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவற்றைச் சேர்ந்த ஏராளமானோர் குஷ்புவைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர்.
இதே மதுரையில் தான் முன்பொரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications