ஊட்டி ரேடியோ நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தைகள்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

ஊட்டி அகில இந்திய வானொலி நிலைய வளாகத்திற்குள் 3 குட்டிகளுடன் தாய் சிறுத்தை புகுந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

ஊட்டியில் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பு அலுவலகம் உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் இந்த வானொலி நிலையவளாகம் உள்ளது. இங்கு கட்டடங்கள் தவிர ஏராளமான புதர்களும், பெரும் மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன.

இன்று காலை, வானொலி நிலைய வளாகத்திற்குள் 3 குட்டிகளுடன், ஒரு தாய் சிறுத்தை புகுந்தது.

இதைப் பார்த்து விட்ட ஊழியர் பாரக் என்பவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

சிறுத்தைகள் நுழைந்ததால் வானொலி நிலைய ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் குட்டிகளுடன் தாய்சிறுத்தை பதுங்கி விட்டது. இருப்பினும், அது வானொலி நிலைய வளாகத்திற்குள்தான் இன்னும் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.

4 சிறுத்தைகளையும் பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+