கட்சியை பதிவு செய்ய டெல்லி சென்ற விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜய்காந்த் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய்காந்த்.மதுரையில் வெற்றிகரமாக பிரமாண்ட மாநாடு நடத்திய கையோடு, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணமும் ஆரம்பிக்கவுள்ளார்.இதற்கிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும்பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இன்று காலை அவர் டெல்லி சென்றார்.
கட்சியை பதிவு செய்துவிட்டு, வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கும் சினிமா நடிகர்களுக்கான பாராட்டு விழாவிலும் அவர்பங்கேற்கிறார்.
5ம் தேதி வரை டெல்லியில் இருக்கும் விஜய்காந்த், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.விஜய்காந்துடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications