நர்சரி பள்ளி ஆசிரியை மானபங்கம்: காதலை ஏற்காததால் டிரைவர் வெறிச்செயல்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே நர்சரி பள்ளி ஆசிரியை, பள்ளியின் வேன் டிரைவரால் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
குருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (26). இவர் பெருமாநாடு என்ற இடத்தில் உள்ள நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்தப் பள்ளியின் வேன் டிரைவராக இருப்பவர் துரையரசன். சித்ராவை துரையரசன் காதலித்ததாகவும் ஆனால், அதை சித்ரா ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.
இந் நிலையில் பள்ளியில் ஒரு அறைக்குள்ளேயே சித்ராவைத் தள்ளி கதவைப் பூட்டிய துரையரசன், அவரை கற்பழித்தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் சித்ரா கொடுத்த புகாரைத் தொடர்ந்து, துரையரசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் துரையரசனுக்கு ஆதரவாக இருந்ததாக பள்ளியின் தாளாளர் ஜெயராணி மீதும் சித்ரா புகார் கொடுத்தால், அவரிடமும் விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications