ஓகேனக்கலை சுற்றி வந்த கிளைடர் விமானம்: கர்நாடகம் அனுப்பியதா?
தர்மபுரி:
தமிழகம், கர்நாடகத்துக்கு இடையே சர்க்குள்ளாகியுள்ள ஓகேனக்கல் பகுதியில் கிளைடர் விமானம் சுற்றியதால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.ஓகேனக்கல்லின் தீவுப் பகுதியை திடீரென கர்நாடகம் சொந்தம் கொண்டாட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இருமாநிலங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இப் பகுதியில் புதிதாக சர்வே நடத்த முடிவுசெய்துள்ளது.
இந் நிலையில் கிளைடர் விமானம் ஒன்று இந்தப் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தது. கர்நாடகத்தின் தரப்பில் இருந்து வானில்இருந்து சர்வே நடத்த இந்த கிளைடர் அனுப்பப்பட்டிருக்கலாம் என தமிழக தரப்பில் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த கிளைடர் எங்கிருந்தது வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன். விமானத்துறையிடமும்காவல்துறை பேசி வருகிறது.
இதற்கிடையே கர்நாடக, தமிழக எல்லைப் பிரச்சனை காரணமாக ஓகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அடியோடுபாதிக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் குவிக்கப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடி நிலவுவதால் இங்கு வருவதை பயணிகள் தவிர்த்துவருகின்றனர்.
அருவியில் ஏகப்பட்ட நீர் விழுந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனை வைத்துப் பிழைப்பு நடத்தவிருந்த பரிசல்காரர்கள்,உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications