கராத்தேயின் நண்பர்களும் தலைமறைவு: வீடுகளில் போலீஸ் விசாரணை
சென்னை:
லஞ்சம் வாங்கிக் கொண்டு விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி தந்த விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டுவரும் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் நண்பர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் கராத்தே டெல்லியில் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.விளம்பரப் பலகைகள் விவகாரம் தவிர, மாநகராட்சி நிலத்தை சுவாஹா செய்தது, கள்ளக் கடத்தில் கும்பலுடன் தொடர்பு, வருமானத்தைமீறி சொத்து குவித்தது என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ளார் கராத்தே.
இவர் மீது போலீசார் இதுவரை முறையாக வழக்கு ஏதும் பதிவு செய்யாவிட்டாலும் அவரைக் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.ஆனால், தன் மீது வழக்கு ஏதும் இல்லை என்பதையே சாதகமாக வைத்துக் கொண்டு சென்னையை விட்டு வேறிடத்தில் பதுங்கியிருக்கிறார்கராத்தே.
இதனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக அறிவிக்க முடியாமல் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
கராத்தேவைப் பிடிக்க அவரது நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். அவரது கூட்டாளியான பாண்டியனின்என்பவரின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். நொச்சிக்குப்பம் துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ளஅவரது வீட்டுக்கு சாதாரண உடையில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால், அதற்குள் பாண்டியனும் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் அவரது மனைவி கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது பாண்டியனின் செல்போனை போலீசார் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
மேலும் அவரது மைத்துனரின் கடையிலும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதே போல கராத்தேவின் நிதி நிர்வாகத்தை கவனித்துவருபவரான சின்னையன், கராத்தேவின் உதவியாளரான சாதிக் ஆகியோரையும் தேடி போலீசார் அவர்களது வீடுகளுக்குச் சென்றபோதுஅவர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
இதற்கிடையே கராத்தே இப்போது டெல்லியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்தகராத்தேவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதியைப் பார்த்து கட்சியில் பலரும் திகிலடைந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications