ராயபுரம் ரயில் நிலையம் புனரமைப்பு: வேலு திறந்து வைத்தார்
சென்னை:
தென் இந்தியாவில் மறுசீரமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வேத்துறை இணையமைச்சர்வேலு திறந்து வைத்தார்.
ரூ. 35 லட்சம் செலவில் இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.1856ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் தான் தென்னக ரயில்வேயின் முதல் ரயில் நிலையமாகும். ஆங்கிலேயர் காலகட்டடக் கலையுடன் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் சிதிலடைந்து கிடந்தது.
பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் இந்திய ரயில்வேயின் திட்டப்படி இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டது.
நிலையத்தைத் திறந்து வைத்த வேலு பேசுகையில், இந்த ரயில் நிலையத்தின் சரக்குகள் கையாளும் பிரிவு விரிவாக்கப்படும்.சென்னை சென்ட்ரலுக்கு வரும் பார்சல்களை ராயபுரம் ரயில் நிலையத்துக்கு அனுப்பி கையாளும் வகையில் இந்த ரயில் நிலையம்மாற்றி அமைக்கப்படும்.
நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி முக்கியஸ்தரும், தமிழக சட்ட அமைச்சருமான ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். திமுக, பாமகமத்திய அமைச்சர்கள் நடத்தும் விழாக்களில் வழக்கமாக தமிழக அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications