For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக சட்டசபை தேர்தல்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம்
டெல்லி:
தமிழக, பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க நாளை தென் மாநில தேர்தல்அதிகாரிகளின் கூட்டத்தை மத்திய தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.தமிழகம் தவிர கேரளா, பாண்டிச்சேரி சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதாதமிழக சட்டசபையை முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தேர்தல் பணிகள், புதிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்குதல் ஆகியவை குறித்துவிவாதிக்க தென் மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.
இதில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி தவிர்த்து ஆந்திர, அந்தமான் நிகோபார் மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
Comments
Story first published: Tuesday, October 4, 2005, 5:30 [IST]