சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைகள் நெட் மூலம் இணைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக்கழகங்களை இன்டர்நெட் மூலம் இணைத்து பாடங்கள், ஆராய்ச்சி கட்டுரைகளைப்பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விர்சுவல் யுனிவர்சிட்டியை ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்தார்.
இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து வழங்கவுள்ள தொலைக் கல்விக் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.ஜனாதிபதி மாளிகையில் இருந்தபடியே இத் திட்டத்தைத் துவக்கி வைத்து, சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்தமாணவர்களிடையே டெலி கான்பரன்சிங் மூலம் அவர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், புவியியல் தடைகள், வரலாற்றுத் தடைகளை உடைத்து மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி வழங்கும்திட்டம் இது. வருங்காலத்தில் இதுபோல மேலும் பல கல்வி நிலையங்கள் ஒன்றிணைந்து கல்வியை எல்லோருக்கும் எடுத்துச்செல்ல வகை செய்யப்படும் என்றார்.
பின்னர் மாணவர்களுன் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications