For Daily Alerts
Just In
கொலை வழக்கில் தமிழக முத்தரையர் சங்கத் தலைவர் சரண்
திருச்சி:
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழக முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதனும், அவரது உதவியாளர் சண்முகமும் கரூர்நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.இந்தச் சங்கத்தின் பொருளாளரான மாணிக்கம் என்பவர் கடந்த 2ம் தேதி திருச்சி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தின் அருகேவைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் விஸ்வநாதனையும் சண்முகத்தையும் போலீசார் தேடி வந்தனர். ஆனால், இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் இருவரும் இன்று கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுக்கு இருவரையும் வரும் 10ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Thursday, October 6, 2005, 5:30 [IST]