For Daily Alerts
Just In
கேரளத்தில் தமிழக பஸ் மீது கல் வீச்சு: ஒருவர் காயம்
எர்ணாகுளம்:
கேரளத்தில் தமிழக பஸ்சின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.
எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது இத்தாக்குதல் நடந்தது. அம்பலப்புழா என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது இருவர் தமிழக பஸ் மீது கல் வீசித்தாக்கினர்.இதில் சங்கர் என்ற ஒரு பயணி காயமடைந்தார். பஸ்சின் கண்ணாடியும் உடைந்தது. இத் தாக்குதலையடுத்து பஸ்சில் இருந்த 45பயணிகளும் அச்சத்தில் அலறினர்.
இதையடுத்து பஸ்ஸை நிறுத்திய டிரைவர் அந்த நபர்களை பிடிக்க முயன்றார். ஆனால், இருவரும் தப்பியோடிவிட்டனர்.
தமிழக பஸ் மீது தாக்குதல் நடந்ததை அறிந்த கேரள போலீசார் விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் கல்வீசியவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், சிறிது தூரம் ஓடிவிட்டு அந்த நாய் நின்றுவிட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து அவரதுஆதரவாலர்களே இந்தச் செயலை செய்ததாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல தமிழக பஸ் மீதுதாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, October 7, 2005, 5:30 [IST]