கராத்தே மீதான பாய்ச்சல்: சசி-ஜெ மோதல் எதிரொலி?
சென்னை:
சசிகலாவின் ஆதரவுடன் பல வகையிலும் கராத்தே தியாகராஜன் பணத்தை சுருட்டியதால் தான் அவர் மீது அதிமுக தலைமைபாய்ந்ததாகக் கூறுகிறார்கள்.
சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அவரது ஆதரவால் தான் கட்சியின் சீனியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டுஅதிமுகவில் திடீரென வளர்ந்தார். காங்கிரசில் இருந்து வந்த கையோடு துணை மேயரும் ஆனார்.சசியின் கோர் டீமில் முக்கிய இடம் பிடித்த அவர், அந்த செல்வாக்கை வைத்து கோடிகளை சுருட்டி வந்துள்ளார்.
இந் நிலையில் போயஸ் கார்டனின் பெரியம்மா-சின்னம்மா இடையே மீண்டும் ஒரு ரவுண்டு பனிப் போர் வெடித்துள்ளதுஎன்கிறார்கள்.
சமீபத்தில் சின்னம்மாவுக்கு மிக நெருக்கமாக இருந்து வரும் 35 அதிமுக எம்எல்ஏக்களை நேரில் அழைத்து டோஸ் விட்டாரம்முதல்வர். சில அமைச்சர்களும் காய்ச்சி எடுக்கப்பட்டார்களாம்.
இந் நிலையில் தான் சின்னம்மாவுக்கு நெருக்கமான கராத்தே மீது திடீர் பாய்ச்சல் ஆரம்பமானது என்கிறார்கள். கராத்தே மீதானஇந்த நடவடிக்கையே சின்னம்மாவுக்கு செக் வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தான் என்கிறார்கள்.
மேலும் சமீப காலமாக முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவில் தான் பெரும்பாலும் இருக்கிறாராம். தோழி சசிகலாமட்டுமே போயஸ் தோட்டத்தில் தங்கியிருக்கிறாராம்.
என்னமோ நடக்குது..












Click it and Unblock the Notifications