நெல்லையில் கடல் கொந்தளிப்பு: வீடுகளில் நீர் புகுந்தது

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை மாட்டத்தில் கூட்டப்புளி பகுதியில் இன்று அதிகாலை கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்துநூற்றுக்கணக்கான மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

கூடங்குளம் அருகே இச் சம்பவம் நடந்தது. திடீரென கொந்தளித்த கடலில் மிக உயரமான அலைகள் எழும்பின. இதில்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. அதிகாலை 3 மணியளவில் இச் சம்பவம் நடந்தது. அப்போதுகடலோரத்தில் யாரும் இல்லை.

உயரமாக எழும்பிய அலைகள் சிறிது நேரத்தில் கிராமத்துக்குள் புகுந்தது. சுனாமி ஏற்பட்டுவிட்டதாக அச்சம் பரவியதால் மக்கள்அலறிக் கொண்டு ஓடினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சீற்றம் நீடித்தது.

வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப் பகுதி மக்கள் பாதுகாப்பாக ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தமிழகத்தின் கடல் பகுதிகளில் சுனாமிக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+