ஆண்டவன் சொல்றான், புஷ் செய்றார்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
கடவுள் உத்தரவிட்டதால் தான் ஈராக் மீது படையெடுப்பு நடத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ்கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :புஷ் நீ ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாதிகளை எதிர்த்து சண்டைபோடு என்று கடவுள் கூறினார். அதன்படிநான் நடந்து கொண்டேன்.
அதன் பிறகு இறைவன் என்னிடம், ஜார்ஜ், ஈராக் சென்று அங்கு நடக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுஎன்று கூறினார். அதன் படி செய்தேன்.
இப்போது கடவுள், என்னிடம் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் நாட்டை பெற்று கொடு, அவர்கள்பாதுகாப்பாக வாழ வழி செய்து கொடு என்று கூறியுள்ளார். அதை நிறைவேற்ற நான் முயற்சி செய்து வருகிறேன்என்றார்.












Click it and Unblock the Notifications