சென்னை மாநகராட்சியில் மர்ம தீ: கராத்தே அறையில் முக்கிய ஆவணங்கள் அழிப்பு?
சென்னை:
சென்னை மாநகராட்சியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் துணை மேயர் கராத்தே தியாகராஜனின் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து போயின.
அதிமுக தலைமையுடனான மோதலால் கராத்தே தலைமறைவாக உள்ள நிலையில் இந்த திடீர் தீ விபத்து பல்வேறுசந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இன்று காலை 10.50 மணியளவில் இரண்டாவது மாடியில் உள்ள துணை மேயர் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீவேகமாகப் பரவி துணை மேயரின் உதவியாளர்கள் அறை, தலைமைப் பொறியாளர் பாலசுப்பிரமணியத்தின் அறைக்கும்பரவியது.
இதையடுத்து 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதற்குள் கராத்தேவின் அறையில் இருந்த பலஆவணங்கள் எரிந்து போய்விட்டன.
இது விபத்தா அல்லது வேறு யாருடைய கைவரிசையா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள கராத்தே மீது வழக்குகள் பதிவாக உள்ள நிலையில், இந்த தீவிபத்து பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஆவணங்களை அழிக்க இந்தத் தீ வைக்கப்பட்டதோ என்றசந்தேகமும் பரவியுள்ளது.
மேலும் கராத்தேவை வசமாக மாட்டி விட யாராவது இந்த வேலையைச் செய்திருப்பார்களோ என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்தத் தீ விபத்து பல கேள்விகளையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது வெளியே மழை கொட்டோ, கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாநகராட்சி எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், துணை மேயர் தலைமறைவானது, அதைத் தொடர்ந்து அவரதுஅறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதெல்லாம் ஏதோ திகில் கதை மாதிரி இருக்கிறது. என்னவோ நடக்கிறது என்றனர்.
கராத்தே பேட்டி:
இந் நிலையில் கராத்தேவை தினகரன் நிருபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தீ விபத்து குறித்து கேட்டபோது:
நான் இப்போது புனேவில் உள்ளேன். எனது அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக எனக்கும் தகவல் வந்தது. அது தொடர்பாக முழுவிவரம் இல்லை. இதில் என்னென்ன ஆவணங்கள் எரிந்து போயின என்பது குறித்து இப்போது எனக்குத் தெரியவில்லைஎன்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications