பாகிஸ்தான்: இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள் உயிருடன் மீட்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிட இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள்மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய ராணுவ படைகள், பிரன்ச்சு நிபுணர் உதவிக் குழவுடன் சேர்ந்து பாலகாட் என்ற இடத்தில் பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 370 பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மீட்புப்பணியில் இதுவரை 40 குழந்தைகளும், 60 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக, தொலைபேசியில் தகவல்கிடைத்தது என்று பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000த்தைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பகுதிகள் மலை சார்ந்தவை என்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்துடன் நடந்து வருகின்றன.ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புப் படையினர் அடைய முடிகிறது.
அதே போல இந்தப் பகுதிகளுக்கு உணவு, உடைகள், படுக்கைகள் ஆகியவையும் ஹெலிகாப்டர்கள் மூலமேவழங்கப்பட்டு வருகின்றன.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் முழுமையான மீட்புப் பணி நடக்கவில்லை.