For Daily Alerts
Just In
சென்னை வந்தது கிருஷ்ணா நீர்
சென்னை:
ஆந்திராவிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், புதன்கிழமை காலை 10 மணிக்கு பூண்டி நீர்த் தேக்கத்தை வந்தடைந்தது.
கடந்த 6ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து விட்டது. செவ்வாய்க்கிழமை இந்த தண்ணீர்தமிழக, ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையை அடைந்தது. புதன்கிழமை காலை இந்தத் தண்ணீர் பூண்டி நீர்த் தேக்கத்தைஅடைந்தது.வினாடிக்கு 60 கன அடி நீர் என்ற அளவில் தற்போது நீர் வருகிறது. படிப்படியாக திறந்து விடப்படும் நீரின் அளவைஅதிகரிப்பதாக ஆந்திரா உறுதியளித்துள்ளது.
தற்போது பூண்டியை அடைந்துள்ள நீர், சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வினியோகிக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்துகன மழை பெய்து வருவதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகியஏரிகளுக்கு கணிசமான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, October 13, 2005, 5:30 [IST]