விஜயகாந்த்துடன் கூட்டணி கிடையாது: பாஜக
சென்னை:
விஜயகாந்த்தின் புதிய கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று அகில இந்தியபாஜக செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணிவைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. 234 தொகுதிகளிலும் பாஜக தனித்தேப் போட்டியிடும்.எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், தலித்துகளின் நிலை, பெண்களின் நிலைகுறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரம் செய்வோம்.
முதல்வர் ஜெயலலிதா தினசரி ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். ஆனால் அவையெல்லாம் வெறும் ஏட்டளவில்மட்டுமே உள்ளன. அதற்குரிய நிதியாதாரம் குறித்து முதல்வர் பேச மறுப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
மத்தியில் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தமிழக நலன் குறித்துக்கவலைப்படாமல் அரசியல் செய்வதிலேயே தீவிரமாக உள்ளனர். மத்தியில் உள்ள திமுக மத்திய அமைச்சர்களால் தமிழகமக்களுக்கு ஒரு பலனும் கிடைக்கவில்லை.
அக்டோபர் 18ம் தேதி தமிழகத்தில் மாவட்ட அளவில் தேர்தல் ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். அதேபோல 21ம் தேதிமதுரையில் பாஜக வெள்ளி விழா மாநாடும் நடத்தப்படும் என்றார் தத்தாத்ரேயா.












Click it and Unblock the Notifications