முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: கருணாநிதி உறுதி
சென்னை:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று திமுக தலைவர்கருணாநிதி உறுதியளித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பங்கேற்ற கருணாநிதிபேசியதாவது:இந்த அம்மையார், நான்கு ஆண்டு காலம் தராத போனஸ் தொகையையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றுசொல்லி ஊழியர்களுக்கு தந்திருந்தால் யோக்கியமானவர் என்று கூறலாம்.
மேலும் தனது அறிக்கையில், மஞ்சள் வர்ணம் துரோகத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார். மஞ்சள் பூசிக்கொள்ளும் குடும்ப பெண்களிடம் இதைச் சொன்னால் சுமங்கலிகள் பொறுத்துக் கொள்வார்களா? அதைப்பற்றியெல்லாம் அம்மையாருக்கு கவலையில்லை.
மஞ்சள் மங்கலத்தின் அடையாளம், மஞ்சள் நல்ல ஆன்டிபயாடிக்" மருந்து, தமிழக மக்கள் மஞ்சளைபயன்படுத்தினால் தான் நம் சமுதாயத்தை, நாட்டை கெடுக்கிற விஷப் பூச்சிகளை அகற்றலாம்.
சிறுபான்மையனருக்கு நாங்கள் தருவது வெறும் தேர்தல் வாக்குறுதியல்ல, ஆட்சிக்கு வந்தால் இட நிச்சயம்ஒதுக்கீடு தருவோம். வர இயலாவிட்டால் அதற்காக போராடுவோம் என்றார் கருணாநிதி.
விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் நல்லகண்ணு உள்படபலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications