கட்டபொம்மன் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடத்தில் அவரது 206வது நினைவுதினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களால் கயத்தாறுஎன்ற இடத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலையும் அங்குஅமைக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த சிலை மற்றும் நினைவிடத்தை அமைத்துள்ளார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 205 ஆண்டுகள் முடிந்து 206வது ஆண்டு பிறந்தது.
இதையடுத்து வைகோ தனது கட்சியினருடன் சென்று கட்டபொம்மன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications