டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட போலீஸ் குடும்பங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலூர் ஆயுதப்படை போலீசாரின் குடும்பங்கள் ஒன்றாக திரண்டு சென்று சென்னை காவல்துறை இயக்குனர்அலுவலகத்தை முற்றுகையிட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டில் சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்ட போலீசாருக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில்பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அப்போது சென்னையில் பணிபுரிந்த 60 போலீசார் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

ஓராண்டுக்குள் மீண்டும் சென்னைக்கு பணி மாறுதல் தரப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.ஆனால் இதுவரை சென்னைக்கு பணி மாறுதல் தரப்படவில்லை.

இந்த நிலையில், இந்தாண்டு சிறப்புக் காவல் படையிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 600 பேரில் 450 பேர்சென்னையிலும், மீதி காவலர்கள் அவர்கள் விரும்பும் மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டனர்.

இதையறிந்த வேலூர் ஆயுதப்படையில் இருந்த 60 போலீசாரும் சென்னைக்கு மாறுதல் கேட்டு தங்களதுகுடும்பத்தினரை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் ஒட்டுமொத்தமாக டிஜிபி அலுவலகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இவர்கள்இடமாற்றல் கேட்டு மனு கொடுத்தனர்.

இவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று காவல் துறை இயக்குனர் அலுவலகம் உறுதியளித்ததைதொடர்ந்து கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+