ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: கொல்கத்தாவில் அவசரமாய் தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
காக்பிட் அறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானம்இன்று மிக அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
389 பயணிகளுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த அந்த போயிங்-747 விமானத்தின் விமானிகள்அறையில் (காக்பிட்) திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை பரவியது. இந்தியாவின் வட-கிழக்குப் பகுதி வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இதையடுத்து கொல்கத்தாவில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார் விமானி.
இதையடுத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் எமெர்ஜென்சில் லேண்டிங்குக்குத் தயார் செய்யப்பட்டது.அதில் இன்று பகல் 12.51 மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
பயணிகளும் விமான சிப்பந்திகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications