ஸ்டண்ட் மாஸ்டரின் மனைவி மாயம்: கடத்தப்பட்டாரா?
சென்னை:
சினிமா ஸ்டண்ட் மாஸ்டரின் மனைவி திடீரென்று மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். ஸ்டண்ட் நடிகரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், நான் திரைப்பட ஸ்டண்ட் நடிகராக இருந்து வந்தேன். 200 படங்களில் நடித்துள்ளேன். இப்போது ஸ்டண்ட்மாஸ்டராக உள்ளேன்.
எனக்கும் எனது மனைவி மல்லிகாவிற்கும் கடந்த 97ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு தனுஜா (வயது 5)என்ற பெண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்த எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அப்போது எனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்கும்படி மல்லிகாவின் உறவினர்கள் உஷா மற்றும்ராமலிங்கம் ஆகியோர் என்னை வற்புறுத்தினர். இதற்கு மல்லிகா எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன்பின் மல்லிகாவின் உறவினர்கள் துபாயில் இருந்து கொண்டு வரப்படும் கடத்தல் பொருட்களையும்,போதைப் பொருட்களையும் விற்பனை செய்யும்படி என்னிடம் கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
ஆனால் எனது மனைவியை நயமாக அவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு அழைத்து சென்று விட்டனர். எனதுமனைவியை சந்திக்க சென்ற போது, அவர் தற்போது முக்தி முகமது, கவுரி மற்றும் ஜீயா ஆகியோரின் பிடியில்இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கள்ளக்கடத்தல் செய்யும் கும்பலின் பிடியிலுள்ள எனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தர வேண்டும் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications