Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நண்பருக்கு நாயுடு ஹால் டார்ச்சர் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நண்பனுக்கு பாடம் புகட்ட பெண்களின் உள்ளாடைகளை தபாலில் அனுப்பி தொல்லை கொடுத்தவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னை மைலாப்பூர் சித்திரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). அண்ணாசாலையில் பிரபலதனியார் நிறுவனமொன்றில் மேலாளராக உள்ளார். இவரை இழிவு படுத்தி கடந்த ஒராண்டு காலமாக ஈ-மெயிலில்ஆபாச கடிதங்கள், மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ரமேஷை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் கூரியர் தபால் ஒன்றுவந்தது. அந்த தபாலை விரித்து பார்த்த போது அதற்குள் பெண்கள் அணியும் ஜட்டி, பிரா போன்றவை இருந்தன.மேலும் ஒரு கடிதமும் இருந்தது.

அந்த கடிதத்தில் நீ ஒரு பொட்டப்பயல். அதனால் தான் இதை அனுப்பியுள்ளேன் என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் ரமேஷ் மன உளைச்சல் அடைந்தார். யார் இப்படி தமக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்று புரியாமல்தவித்தார்.

அந்த உள்ளாடைகள் ஒரு இணையத் தளத்தின் ஷாப்பிங் செக்ஷன் மூலமாக வாங்கி ரமேஷின் முகவரிக்குஅனுப்பப்பட்டிருந்தது.

இதே போன்ற பார்சல் கடந்த வாரமும் மீண்டும் வரவே, அதை எடுத்துக்கொண்டு போலீஸ் கமிஷனர் நடராஜைசந்தித்து புகார் கொடுத்தார். தனக்கு இது போன்ற தொந்தரவு தரும் ஆசாமியை கண்டு பிடித்து உரிய நடவடிக்கைஎடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதயடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டதின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோதண்டராமன், மஞ்சுளா, ஆகியோர் அடங்கியபோலீஸ் படையினர் விசாரணயில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் உள்ளாடைகளை அனுப்பிய குற்றவாளி ரமேஷின் நெருங்கிய நண்பர் ஜேசு விமலன் என்பதுகண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்ப்டடார். ஜேசு விமலன் சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் கம்ப்யூட்டர்பிரிவில் பணியாற்றுகிறார். ரமேசும், இவரும் ஒன்றாக படித்தவர்கள். ஜேசு விமலன் வேலை கிடைக்காமல் இருந்தபோது ரமேஷ் இவரை நீ ஒரு முட்டாள் உனக்கு எவன் வேலை கொடுப்பான் என்று திட்டியுள்ளார்.

ஜேசு விமலனுக்கு வேலை கிடைத்து விட்ட பிறகும் தொடர்ந்து இவரை ரமேஷ் கிண்டல் செய்து வந்துள்ளார்.

இதனால் தன்னை அவமானப்படுத்திய ரமேஷை அவமானப்படுத்தவே, பெண்களின் உள்ளாடைகளைஅனுப்பியதாக போலீஸ் விசாரணையில் ஜேசு விமலன் ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து ஜேசு விமலன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்ரேட்டு அருள்ராஜ்உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணை தொடங்கிய 12 மணி நேரத்தில் குற்றவாளி யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இணையத்தளத்தில் ரமேஷின் முகவரிக்கு உள்ளாடைகளை டெலிவரி செய்ய தனது கிரெடிட் கார்டை ஜேசு விமலன்பயன்படுத்தியிருந்தார்.

இதனால் அவர் எளிதாக மாட்டிக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+