For Daily Alerts
Just In
ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை
வேலூர்:
வேலூர் அருகே முன் விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.வேலூர் அருகே காட்டுக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமன், அவரது சகோதரர் கேசவன், அவர்களது உறவினர் பிச்சாண்டிஆகியோர் புதன்கிழமை இரவு காட்டுப் பாதை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது புதரில் மறைந்திருந்த ஒரு கும்பல் மூன்று பேரையும் வழிமறித்து கோடாலி, அரிவாள்களால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
Comments
Story first published: Wednesday, October 19, 2005, 5:30 [IST]