விஜயகாந்த்- அஜீத் ரசிகர்கள் திடீர் மோதல்: 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் சென்னை அருகே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
அஜீத் ரசிகர்களைத் தாக்கியதாக விஜயகாந்த் ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை சைதாப்பேட்டை செட்டித் தோட்டம் பகுதியில் விஜயகாந்த் கட்சியின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை யாரோ சிலர்கிழித்து விட்டனர். கிழிந்து கிடந்த பேனரைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த விஜயகாந்த் ரசிகர்கள் திரளாக கூடி, அஜீத் ரசிகர்கள் மீது தாக்குதலில் இறங்கினர்.
இதில் அஜீத் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ஏழுமலை ஆகியோர் படுகாயமடைந்தனர். அஜீத் ரசிகர்கள் திருப்பித்தாக்கியதில் விஜயகாந்த் ரசிகர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீஸில் புகார் செய்தனர். இருவரது புகாரையும் பதிவு செய்த போலீஸார் இரு ரசிகர்மன்றத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications